64. அருள்மிகு அழகியசிங்கர் கோயில்
மூலவர் அழகியசிங்கர், நரசிம்ஹர்
தாயார் வேளுக்கைவல்லி, அமிர்தவல்லி
திருக்கோலம் பத்மாசன திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் கனக சரஸ் தீர்த்தம்
விமானம் கனக விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பேயாழ்வார்
இருப்பிடம் திருவேளுக்கை, தமிழ்நாடு
வழிகாட்டி காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் பெருமாள் கோயிலுக்கு எதிர்த் தெருவில் அமைந்துள்ளது. ரங்கசாமி குளம் என்னும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு.
தலச்சிறப்பு

Tiruvelukkai Gopuram Tiruvelukkai Moolavarநரசிம்ஹ மூர்த்தி ஆசையுடன் வசிக்கும் இடமாதலால் 'திருவேளுக்கை' என்ற பெயர் ஏற்பட்டது. வேள் - ஆசை, இருக்கை - இருப்பிடம். வேளிருக்கை என்பது மருவி வேளுக்கை என்று ஆனது.

மூலவர் அழகியசிங்கர், நரசிம்ஹர், என்னும் திருநாமங்களுடன் பத்மாசன திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் முகுந்த நாயகன். தாயாருக்கு வேளுக்கைவல்லி, அம்ருதவல்லி என்று இரண்டு திருநாமங்கள். பிருகு முனிவருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

இந்த ஸ்தலத்து நரசிம்ஹர் 'காமாஸிகா நரசிம்ஹன்' என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றி ஸ்வாமி தேசிகன் 'காமாஸிகாஷ்டகம்' என்ற ஸ்லோகம் அருளியுள்ளார்.

பேயாழ்வார் 3 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 1 பாசுரமுமாக 4 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com